Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு தி.மு.க.தான் காரணம்: ஜிகே.வாசன்

அக்டோபர் 25, 2019 08:37

கும்பகோணம்: கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜிகே வாசன் பேட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நீட் தேர்வில் தவறு செய்தவர்களை முறையாக தண்டிக்கவேண்டும்.  தமிழக மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் தாமாக எதிர்க்கும். விக்கிரவாண்டி நாங்குநேரி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருப்பது வாழ்த்து கூறியது தமிழக மக்கள் அதிமுகவையும் அதனை கூட்டணி கட்சிகளையும் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரங்களை செய்தாலும் மக்களை திசை திருப்ப முடியாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு திமுகவின் வழக்கு தான் காரணம். அதிமுக அதனை முறியடித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சிகளோடு இணைந்து போட்டியிட்டு வெற்றிபெறும் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்